ADDED : செப் 26, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காடு, வாழவந்தியில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் மக்கள் சந்திப்பு முகாம் நேற்று நடந்தது. அதில், 153 பயனாளிகளுக்கு, 21.48 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:ஏற்காடு கால்நடை மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பை, ஓட்டல் விடுதி கழிவால் சுற்றுலா பயணியருக்கு இடையூறாக உள்ளதால் மாற்று இடத்தில் குப்பைகளை கொட்டவும்,
அதை சுகாதார முறையில் தரம் பிரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலுார் முதல் கொண்டையனுார் வழியே சாலை பணி விரைவில் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர்
பேசினார். ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

