ADDED : டிச 20, 2025 07:03 AM
சேலம்: சேலம் மாநகர சாலையோர வியாபாரிகள், 50க்கும் மேற்-பட்டோர் நேற்று, மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகை-யிட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
மாநகராட்சி கமிஷனர் தலைமையில் நடந்த விற்பனை குழு கூட்-டத்தில், ஆனந்தா இறக்கம், ஆற்றோர மார்க்கெட், கே.வி.எஸ்., மார்க்கெட், வணிக வளாக மார்க்கெட் ஆகியவை வியாபாரம் செய்யக்கூடிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சாலையோர விற்-பனை கட்டணம் மட்டும் வசூலிப்பது என, முடிவு செய்யப்பட்-டது.
அதன்படி தினமும், 30 முதல், 50 ரூபாய் வரை கட்டணம் வசூ-லிக்க வேண்டும். ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளதால், குத்தகைதாரர் தினமும், 300 ரூபாய் வரை சுங்கம் வசூலிக்கிறார். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்-பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் பேச்சு நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

