/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ. 28.33 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கல்
/
ரூ. 28.33 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கல்
ADDED : டிச 03, 2024 06:58 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தை-யொட்டி, உறுதிமொழி
ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் பிருந்தாதேவி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர்
அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம், திரு-வள்ளுவர் சிலை, மாநகராட்சி
அலுவலகம் வழியாக சென்று அரசு மருத்துவமனையை அடைந்தது. கல்லுாரி
மாணவ,மாண-வியர் பங்கேற்றனர். அதன்பின் கலெக்டர் கூறியதாவது:தாய்-சேய் மேவா திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களை புதிய கூட்டுமருந்து
சிகிச்சைக்கு உட்படுத்தி, தொற்று இல்லாத குழந்-தைபெற நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. சுகவாழ்வு மையங்கள் மூலம், பால்வினை பரிசோதனை,
சிகிச்சை அளிக்கப்-பட்டு வருகிறது. எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தனியார்
கல்லுாரிகள் மூலம், 2011 முதல், உயர்கல்வி இலவசமாக வழங்கப்பட்டு
வருகிறது. மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் அறக்கட்டளை வாயிலாக,
2023-24ல், கல்வி உதவித்தொகையாக, 28.33 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதம் முழுவதும், 20 வட்டாரம், 14 வட்டங்களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பற்றி
பல்-வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இவ்வாறு கூறினார்.தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், கண்காட்சி நடந்தது.