/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடையின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு
/
கடையின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு
ADDED : ஜூலை 02, 2024 07:23 AM
சேலம் : சேலத்தில், கடையின் பூட்டை உடைத்து, 7 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.சேலம், சூரமங்கலம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் தேவகுமார், 57.
இவர் நடன, நாடக கலைஞர்களுக்கான துணியை வாடகைக்கு கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த, 29ல் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று முன்தினம் கடையின் பூட்டு உடைக்கப்-பட்டு இருப்பதாக, தேவகுமாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, கடையில் இருந்த பணம், நகைகளை காண-வில்லை என புகார் தெரிவித்தார்.சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி-யதில், 6 பவுன் நகை இருப்பதும், 7 லட்சம் ரூபாய் மட்டும் திருட்டு போனது தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததுடன், தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.