sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வனக்காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

/

வனக்காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

வனக்காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

வனக்காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு


ADDED : செப் 13, 2011 01:51 AM

Google News

ADDED : செப் 13, 2011 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம் வனத்துறை அலுவலகத்தில், வனக்காப்பாளர் பணிக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது.

இன்று எழுத்துத்தேர்வு நடக்கிறது.சேலம் மாவட்டத்தில், தெற்கு வனச்சரகம், சேர்வராயன் தெற்கு வனச்சரகம், சேர்வராயன் வடக்கு வனச்சரகம், டேனிஸ்பேட்டை வனச்சரகம் மற்றும் மேட்டூர் வனச்சரகம் உள்ளது. வனச்சரகங்களில், வனக்காப்பாளர் பணியிடத்துக்கு பல ஆண்டுகளாக ஆள் பற்றாக்குறை இருந்தது. அந்த பணிக்கான ஆட்கள் தேர்வு நேற்று துவங்கியது. இன்றும் நடக்கிறது.சேலம் அஸ்தம்பட்டி வனத்துறை அலுவலகத்தில், சந்தன மரக்கிடங்கு அருகில் உள்ள 'கெஸ்ட் ஹவுஸில்' வனக்காப்பாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடந்தது. முதலில், உடல் தகுதி தேர்வு நடந்தது. ஆட்களை தேர்வு செய்யும் பணிக்காக, வனத்துறை சார்பில், ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் சேர்மனாக, சேலம் மாவட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோவில் பிள்ளை, உறுப்பினர்களாக ஆத்தூர் மாவட்ட வன அலுவலர் நாகராஜன் மற்றும் இடைபடு காடுகள் கோட்ட வன அலுவலர் தன்ராஜ் ஆகியோர் உள்ளனர்.



சேலம் மாவட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோவில்பிள்ளை கூறியதாவது:வனக்காப்பாளர் பணிக்கான தேர்வு இன்று (நேற்று) துவங்கியுள்ளது. 22 பேர் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். ஆறு பணியிடத்துக்கான தேர்வு நடக்கிறது. ப்ளஸ் 2 தேர்வில், அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயரம் 163 செ.மீ., இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உடல் தகுதிக்கான தேர்வு நடந்து வருகிறது. நாளை (இன்று) காலை நடைத்தேர்வு நடக்கிறது. இரும்பாலை சாலையில், 25 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு மணி நேரத்தில் கடந்து வர வேண்டும். காலை 5 மணிக்கு நடைத்தேர்வு துவங்குகிறது. இதன் பின், எழுத்துத்தேர்வு நடக்கிறது. இறுதியாக நேர்முகத்தேர்வு நடக்கிறது. இதில் தேர்வு செய்யப்படும் ஆறு பேர், வனத்துறையில் வனக்காப்பாளராக நியமிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.உடல் தகுதிக்கு தேர்வுக்கு வந்தவர்களிடம், வனத்துறை அதிகாரிகள் பெயர் சரி பார்ப்பு, சான்றிதழ் சரி பார்ப்பு, மதிப்பெண் விபரம் மற்றும் விளையாட்டு சான்றிதழ் போன்ற விபரங்களை கேட்டறிந்தனர்.








      Dinamalar
      Follow us