ADDED : ஜூன் 18, 2024 07:10 AM
வாழப்பாடி : வாழப்பாடி அடுத்த பேளூர் வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, 50 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்தது.வாழப்பாடி அடுத்த பேளூர் வாரச்சந்தையில், நேற்று ஆடுகள் விற்பனை நடந்தது.
சேலம், வெள்ளிமலை, கருமந்துறை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, பல்வேறு பகுதியிலிருந்து, 1,600 ஆடுகள் வரை விற்பனைக்கு வந்தது.10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு, 4,500 முதல், 7,000 ரூபாய் வரை விலை போனது. 10 கிலோ எடை கொண்ட பெண் ஆடு, 3,000 முதல் 6,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில், 50 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகை காரணமாக, வழக்கத்தை விட ஆடு விற்பனை அதிகமாகவும், விலை, 1,000 முதல் 3,000 ரூபாய் வரை கூடுதலாக விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.