/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகையிலை பொருட்கள் விற்பனை; இருவர் கைது
/
புகையிலை பொருட்கள் விற்பனை; இருவர் கைது
ADDED : அக் 18, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று போலீசார், தடை செய்த புகையிலை, சாராயம் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, நடுவலுார் பள்ளக்காடு பகுதியை சேர்ந்த குணசேகரன், 48, என்பவரது பெட்டிக் கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான, 10 பாக்கெட் ஹான்ஸ் இருந்தது தெரியவந்தது.
அதேபோல் நடு வீதியை சேர்ந்த ஜெயக்குமார், 50, என்பவரது பெட்டிக் கடையில் இருந்து, 10 பாக்கெட் ஹான்ஸ் செய்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.