sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'சேலம் கோட்ட ரயிலில் 9 மாதத்தில் 2 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றம்'

/

'சேலம் கோட்ட ரயிலில் 9 மாதத்தில் 2 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றம்'

'சேலம் கோட்ட ரயிலில் 9 மாதத்தில் 2 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றம்'

'சேலம் கோட்ட ரயிலில் 9 மாதத்தில் 2 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றம்'


ADDED : ஜன 27, 2025 03:20 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: குடியரசு தின விழாவையொட்டி, சேலம், ஜங்ஷனில் உள்ள ரயில்வே கோட்ட அலுவலகத்தில், அதன் மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, தேசியக்கொடி ஏற்றினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:

ரயில்களில் நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் - டிசம்பர் வரை, 2.085 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. தற்போது முன்பதிவு செய்த டிக்கெட்டுகளில், 40 சதவீத வருவாய், கவுன்-டர்கள் மூலம் வழங்கப்படும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்-டுகளில், 10 சதவீத வருவாய், டிஜிட்டல் முறைகள் மூலம் வசூ-லிக்கப்படுகிறது.நீலகிரி மலை ரயிலில், 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை, 489 சிறப்பு பயணங்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம், 17.88 கோடி ரூபாய் கிடைத்தது. இது, இந்த ரயில் வரலாற்றில், ஓராண்டில் இல்லாத அதிகபட்சம்.

பல்வேறு விதிகளில் தவறு செய்தவர்கள் மீது, 5,800 வழக்-குகள் பதிவு செய்யப்பட்டு, 37.43 லட்சம் ரூபாய் அபராதம் வசூ-லிக்கப்பட்டது. போலி ஐ.டி., பயன்படுத்தி மோசடியாக ரயில்வே இ - -டிக்கெட்டுகளை, முன்பதிவு செய்த, 76 பேர் கைது செய்யப்பட்டனர். 19.42 லட்சம் ரூபாய் மதிப்பில், 1,386 ரயில்வே இ - டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் மேலாளர் சிவலிங்கம், உதவி பாதுகாப்பு கமிஷனர் செங்கப்பா, கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us