sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பத்திரிகையாளர் மீதானதாக்குதலுக்கு கண்டனம்

/

பத்திரிகையாளர் மீதானதாக்குதலுக்கு கண்டனம்

பத்திரிகையாளர் மீதானதாக்குதலுக்கு கண்டனம்

பத்திரிகையாளர் மீதானதாக்குதலுக்கு கண்டனம்


ADDED : ஜூலை 28, 2011 02:37 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு, சேலம் மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து மன்றத்தின் தலைவர் கதிரவன், செயலாளர் தங்கராஜா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:இந்திய ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் செய்யும் தவறுகளை, துஷ்பிரயோகங்களை சுட்டிக்காட்டி உணரவைப்பதே நான்காவது தூணாக பத்திரிகையின் கடமை.

இதனடிப்படையில் நேற்று, சேலம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை ஆஜர்படுத்த வரும்போது, அந்த செய்தியை சேகரித்து மக்களுக்கு கொண்டுசெல்லும் கடமை செய்ய, அங்கே குவிந்திருந்த பத்திரிகையாளர்களை சில சமூக விரோதிகள் தடுத்து தாக்கினர்.நீதியை நிலநாட்டக்கூடிய நீதிமன்றத்தில், சட்டத்தை காக்கவேண்டிய வக்கீல்கள் சிலரும் இணைந்து தாக்குதல் நடத்தியது வேதனை அளிக்கிறது. ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் இதுபோன்ற செயல்களை, சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.






      Dinamalar
      Follow us