sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கணவன் சாவு: மனைவி தற்கொலை முயற்சி

/

கணவன் சாவு: மனைவி தற்கொலை முயற்சி

கணவன் சாவு: மனைவி தற்கொலை முயற்சி

கணவன் சாவு: மனைவி தற்கொலை முயற்சி


ADDED : ஆக 01, 2011 04:13 AM

Google News

ADDED : ஆக 01, 2011 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர் : ஆத்தூர் அருகே குடும்ப பிரச்னையால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து கணவன் இறந்தார். துக்கம் தாங்காமல் மனைவியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், கரியகோவில், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜீ (23). அவருக்கும், எருமபட்டியை சேர்ந்த ரதி என்பவருக்கும், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதனால் மனமுடைந்த செல்வராஜீ, நேற்று முன்தினம் வீட்டில் வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.அவரை உறவினர்கள் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். கணவன் இறந்ததை அறிந்த மனைவி ரதி, துக்கம் தாங்காமல் நேற்று காலை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரியலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us