/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் வழி சிறப்பு ரயில் மார்ச் 31 வரை நீட்டிப்பு
/
சேலம் வழி சிறப்பு ரயில் மார்ச் 31 வரை நீட்டிப்பு
ADDED : ஜன 31, 2024 03:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:பயணியர் கூட்ட நெரிசலை குறைக்க, ஈரோட்டில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் இடையே இயக்கப்படும் வார ரயில் இயக்கம் மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாந்தேட்டில், பிப்., 2 முதல் மார்ச், 29 வரை வெள்ளிதோறும் மதியம், 2:20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், சனி மதியம், 2:00 மணிக்கு ஈரோட்டை அடையும். மறுமார்க்கத்தில் பிப்., 4 முதல் மார்ச், 31 வரை ஞாயிறுதோறும் மாலை, 5:15க்கு புறப்பட்டு, திங்கள் இரவு, 7:30 மணிக்கு நாந்தேட்டை அடையும்.