sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் சிலவரி செய்திகள்

/

சேலம் சிலவரி செய்திகள்

சேலம் சிலவரி செய்திகள்

சேலம் சிலவரி செய்திகள்


ADDED : ஜூன் 27, 2024 03:43 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

19 - 19ம் காதல்

மாணவர் திருமணத்துக்கு

போலீஸ் மறுப்பு

சேலம்: சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்தவர், 19 வயது மாணவி. தாயை இழந்த அவர், கல்லுாரியில், 2ம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 20ல் கல்லுாரி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர். நேற்று முன்தினம் அந்த மாணவி, அவருடன் படிக்கும், 19 வயது மாணவருடன், போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார். இருவரும் காதலிப்பதாக தெரிவித்தனர். பெண்ணுக்கு திருமண வயதான நிலையில், காதலனுக்கு, 19 வயது என்பதால் திருமணம் செய்து வைக்க போலீசார் மறுத்துவிட்டனர். உறவினர்களுடன் செல்ல மறுத்த மாணவி, மாணவரின் பெற்றோருடன் செல்வதாக கூறி சென்றார்.

மூதாட்டி இறப்பு

வழக்கில் மாற்றம்

சேலம்-

சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சின்னதங்கம், 65. கடந்த மாதம் வீட்டில் தனியே இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த ஒருவர், பேச்சு கொடுத்து, அவர் அணிந்திருந்த, 8 பவுன் நகையை பறித்தார். தடுக்க முயன்ற சின்ன தங்கத்தை தள்ளிவிட்டு வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த சின்ன தங்கம், தனியார் மருத்துவ

மனையில் அனுமதிக்கப்பட்டார். சூரமங்கலம் போலீசார் விசாரித்து, செம்பட்டியூரை சேர்ந்த அரவிந்த், 23, என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் சின்னதங்கம் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் போலீசார், கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனர்.

மயானத்தில் சாராயம்

விற்றவர் கைது

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசார் நேற்று நடுவலுார், மோட்டூரில் ஆய்வு செய்தனர். அப்போது, மயான பகுதியில் உள்ள முட்புதரில் கள்ளச்சாராயம் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட, அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன், 48, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம், 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us