ADDED : நவ 04, 2025 01:49 AM
ஓமலுார், தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது, அதிவேக வந்த பைக் மோதி செக்யூரிட்டி பலியானார்.
காடையாம்பட்டி தாலுகா மூக்கனுாரை சேர்ந்தவர் பழனிசாமி, 65. இவர், ஓமலுாரில் தனியார் மில்லில் செக்யூரிட்டயாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதற்காக, அரசு டவுன் பஸ்சில் ஆர்.சி.,செட்டிப்பட்டியில் இறங்கி, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையை குறுக்கே கடந்த போது, தீவட்டிப்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்த கே.டி.எம்., பைக் ஓட்டி வந்தவர் மோதியதில், பழனிசாமி பலத்த காயம் அடைந்தார்.
அவரை மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பைக்கில் வந்த நபரும் சுயநினைவின்றி, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து ஓமலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ------------------

