/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்களை ஏமாற்றும் சீமான்: கொ.ம.தே.க.,
/
மக்களை ஏமாற்றும் சீமான்: கொ.ம.தே.க.,
ADDED : ஜன 13, 2025 03:21 AM
சேலம்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்
செயலரான, எம்.எல்.ஏ., ஈஸ்வரன், சேலத்தில் நேற்று அளித்த பேட்டி:
ஈரோடு இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில், தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார் வேட்-பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, எங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. எங்கள் பொறுப்பாளர்கள், தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபடுவதால், சந்திரகுமார் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். யாருக்கு ஓட்டுப்-போட வேண்டும் என்பதை, மக்கள் முடிவு செய்துவிட்டதால், தி.மு.க., வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
அ.தி.மு.க., போட்டியிடாதது, அக்கட்சி விருப்பம். யாராக இருந்-தாலும், மறைந்த பெரியவர்களை கொச்சைப்
படுத்தக்கூடாது. சீமான், மக்களை ஏமாற்ற பார்க்கிறார். முதல்வ-ராக இருக்கும் வரை, டங்ஸ்டன் சுரங்கத்தை வர விடமாட்டேன் என, சட்டசபையில் ஸ்டாலின் தெரிவித்திருப்பதால், மக்கள் அச்-சப்பட தேவையில்லை. இத்திட்டம் வர வாய்ப்பு கிடையாது. சட்டசபையில் கவர்னர் நடந்து கொண்ட விதம் தவறானது. திட்-டமிட்டு அவமதிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.