sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மூன்று மண்டலங்களில் நேற்று 40 பேர் மனு தாக்கல்

/

மூன்று மண்டலங்களில் நேற்று 40 பேர் மனு தாக்கல்

மூன்று மண்டலங்களில் நேற்று 40 பேர் மனு தாக்கல்

மூன்று மண்டலங்களில் நேற்று 40 பேர் மனு தாக்கல்


ADDED : செப் 27, 2011 12:46 AM

Google News

ADDED : செப் 27, 2011 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகராட்சியில், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில் நேற்று, 40 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், 14 வார்டுகளுக்கான கவுன்சிலர் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அ.தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர்களாக, 4வது வார்டில் சம்பு, ஐந்தாவது வார்டில் ஜோதி, ஆறாவது வார்டில் மணி, 12வது வார்டில் மதலேனா, 13வது வார்டில் ராமசாமி, 14வது வார்டில் மாதேஸ்வரன், 15வது வார்டில் முருகன், 16வது வார்டில் பிரகாஷ் அப்பாதுரை, 17வது வார்டில் ராஜேந்திரன், 31வது வார்டில் நஜம் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பாளர்களாக, 17வது வார்டில், சீனிவாசன், 16வது வார்டில் மணி, 30வது வார்டில் அப்துல் அஜீஸ் ஆகிய மூவரும் மனு தாக்கல் செய்தனர். மனுக்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மல்லிகா மற்றும் ராம்குமார் பெற்றனர்.



சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில், நேற்று ஒரே நாளில், 16 பேர் கவுன்சிலர் பதவிக்கான வேட்பு மனுக்கலை தாக்கல் செய்தனர். இதில், 45, 46, 47, 48, 49, 50, 51, 52 ஆகிய வார்டுகளுக்கான வேட்பு மனுக்களை உதவி கமிஷனர் (பொறுப்பு) ஜெகநாதன் பெற்றுக் கொண்டார். 53, 54, 55, 56, 57, 58, 59, 60 ஆகிய வார்டுகளுக்கான வேட்பு மனுக்களை உதவி வருவாய் அலுவலர் குமார் பெற்றுக் கொண்டார்.



அ.தி.மு.க., சார்பில், 45வது வார்டில் கீதா, 46வது வார்டில் பாலசுப்பிரமணியன், 47வது வார்டில் கர்ணன், 50வது வார்டில் நடேசன், 51வது வார்டில் பரமசிவம், 52வது வார்டில் மீனாட்சி சுந்தரம், 53வது வார்டில் குலாப்ஜான் சாகுல், 55வது வார்டில் தங்கம்மாள் ஆகிய எட்டு பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.



பா.ம.க., சார்பில், 50வது வார்டில் பழனிசாமி, 58வது வார்டில் சண்முகம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில், 47வது வார்டில் சஞ்சய், 49 வது வார்டில் சேகர், 56 வது வார்டில் செல்வராஜ் ஆகியோர் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.



பிரதான கட்சிகளை தவிர, 49வது வார்டில் சரவணன், 50வது வார்டில் முருகேசன், யுவராஜ், 51வது வார்டில் மணிகண்டன், 60வது வார்டில் தங்கம்மாள் உட்பட ஐந்து பேர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us