sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சங்ககிரி அருகே அரை நிர்வாண கோலத்தில் பெண் சடலம் மீட்பு

/

சங்ககிரி அருகே அரை நிர்வாண கோலத்தில் பெண் சடலம் மீட்பு

சங்ககிரி அருகே அரை நிர்வாண கோலத்தில் பெண் சடலம் மீட்பு

சங்ககிரி அருகே அரை நிர்வாண கோலத்தில் பெண் சடலம் மீட்பு


ADDED : ஜூன் 17, 2025 01:15 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி, சங்ககிரி அருகே, புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலை, அக்கமாபேட்டை அருகே பாலத்திற்கு அடியில் பெண் ஒருவர் வாயில் துணி கட்டி, அரைநிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலுாரில்

இருந்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலையில் சங்ககிரி, அக்கமாபேட்டை அருகே பாலத்தின் அடியில் வாயில் கட்டப்பட்டு, அரை நிர்வாண கோலத்தில் முகம் சிதைந்து, கால்கள் கட்டப்பட்டு, உடல்

அழுகிய நிலையில், 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின்

சடலத்தை சங்ககிரி போலீசார்

கண்டுபிடித்தனர்.

சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம்கோயல், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., சிந்து, சங்ககிரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் விசாரிக்கின்றனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக, போலீசார் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் கடந்தாண்டு செப்., 30ல், பெங்களூருவில் பெண் கொலை செய்யப்பட்டு, சங்ககிரியில் வீசப்பட்டதுபோல், இந்த சம்பவமும் நடந்திருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us