/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையோர உணவு வியாபாரிகள் 1,000 பேருக்கு விரைவில் பயிற்சி
/
சாலையோர உணவு வியாபாரிகள் 1,000 பேருக்கு விரைவில் பயிற்சி
சாலையோர உணவு வியாபாரிகள் 1,000 பேருக்கு விரைவில் பயிற்சி
சாலையோர உணவு வியாபாரிகள் 1,000 பேருக்கு விரைவில் பயிற்சி
ADDED : பிப் 16, 2025 04:00 AM
சேலம்: உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சேலம் கலெக்டர் அலுவல-கத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் உணவு வணிக வியாபாரிகள், ஆயில் உற்பத்தியாளர் மற்றும் வியாபா-ரிகள், பேக்கரி உரிமையாளர்கள், சாலையோர உணவு வியாபா-ரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலு-வலர் கதிரவன் கூறியதாவது:கூட்டத்தில், பாதுகாப்பான, தரமான உணவு தயாரித்து பரிமாறு-வது குறித்து அறிவுறுத்தப்பட்டது. சாலையோர உணவு வியாபா-ரிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அவர்களில், 1,000 பேருக்கு, மார்ச், 31க்குள், உணவு பாதுகாப்பு பயிற்சி அளித்து, அவர்கள் விற்கும் உணவுப்பொருட்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தயாரிக்கப்படும் உணவில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக்கூடாது. அதுதொடர்பாக நடவ-டிக்கை எடுக்க, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்-தப்பட்டுள்ளது. அச்சிடப்பட்ட தாளில் எந்த உணவு பொருட்க-ளையும் பரிமாறக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.