/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோரிக்கை அட்டையுடன் சார் - பதிவாளர்கள் பணி
/
கோரிக்கை அட்டையுடன் சார் - பதிவாளர்கள் பணி
ADDED : ஜன 22, 2026 04:42 AM
சேலம்: தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, கோரிக்கை அட்டையுடன் பணிபுரியும் போராட்டம் நேற்று தொடங்கியது.
குறிப்பாக அனைத்து நிலையிலும் பதவி உயர்வு அளித்து காலியி-டத்தை நிரப்புதல்; நீண்ட கால, துார பொது மாறுதல்களை ரத்து செய்து, விருப்பப்படி இடமாறுதல் தேவை; நீதிமன்ற தீர்ப்பு மற்றும் பதிவு சட்டத்துக்கு எதிரான சுற்றறிக்கைகளை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அச்சிடப்பட்ட அட்டையை அணிந்து பணியாற்றினர்.இதில் சேலம் மாவட்டத்தில், துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகம், கிழக்கு, மேற்கு என இரு மாவட்ட பதிவாளர் அலு-வலகம், அதற்கான இரு தணிக்கை அலுவலகம், இரு மாவட்டத்-துக்கு உட்பட்ட, 23 சார் பதிவாளர் அலுவலகம் என, 28 அலுவ-லக பணியாளர்கள் பங்கேற்றனர்.
தமிழக சார் பதிவாளர் சங்க மாநில தலைவர் மகேஷ் கூறு-கையில், ''தமிழகத்தில், 56 பதிவு மாவட்ட பணியாளர்களும் கோரிக்கை அட்டையுடன் பணியாற்றினர். எங்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால்
அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.

