ADDED : நவ 22, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், காடையாம்பட்டி டவுன் பஞ்., சார்பில், வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடத்தப்பட்டது. பேரணியை ஓமலுார் சட்டசபை தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மயில் கொடியசைத்து துவக்கி வைத்தார். காடையாம்பட்டி அரசு மருத்துவமனை அருகே துவங்கிய பேரணி, தீவட்டிப்பட்டி பிரிவு ரோடு வரை சென்றது.
அப்போது, வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். காடையாம்பட்டி தாசில்தார் நாகூர்மீரான், டவுன் பஞ்., செயல் அலுவலர் பொற்கொடி, அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

