sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாமக்கல் சிலவரி செய்திகள்...

/

நாமக்கல் சிலவரி செய்திகள்...

நாமக்கல் சிலவரி செய்திகள்...

நாமக்கல் சிலவரி செய்திகள்...


ADDED : மார் 18, 2024 03:22 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம்

7 பேர் பங்கேற்க நிர்வாகம் அனுமதி

நாமக்கல்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, தினசரி அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்திற்கான கட்டணம், கட்டளைதாரர்களால் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒருநாள் அபிஷேகத்தில் அதிகபட்சமாக, 5 பேர் பங்கேற்கலாம். ஒருவருக்கு, 6,000 வீதம், மொத்தம், 30,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

தற்போது, அபிஷேக பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, ஒருநாள் அபிஷேகத்தில், மேலும், இரண்டு பேர் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தினமும், 7 பேர் அபிஷேகத்தை ஏற்று நடத்தலாம். அதற்காக, 42,000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அறிவியல் கண்காட்சி போட்டிஅரசு பள்ளி மாணவர் தேர்வு

குமாரபாளையம்: மாநில அளவில் நடந்த அறிவியல் கண்காட்சி போட்டியில், குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் தேர்வாகி உள்ளார்.

குமாரபாளையம், மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர் மகத்ராஜ். இவர், மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகளில், அறிவியல் கண்காட்சி பிரிவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தார். தொடக்கக்கல்வி இயக்குனர் குணசேகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த மாணவர், அரசு சார்பில் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் பெற்றுள்ளார். இவரை பள்ளி ஆசிரியர்கள், பி.டி.ஏ., நிர்வாகிகள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us