sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எஸ்.பி., வைத்த டெஸ்டில் 'பெயில்'; 6 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

/

எஸ்.பி., வைத்த டெஸ்டில் 'பெயில்'; 6 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

எஸ்.பி., வைத்த டெஸ்டில் 'பெயில்'; 6 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

எஸ்.பி., வைத்த டெஸ்டில் 'பெயில்'; 6 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்


ADDED : ஜன 24, 2025 04:02 AM

Google News

ADDED : ஜன 24, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், குடியரசு தின பாதுகாப்பு கருதியும், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், சரியாக பணிபுரிகின்றனரா என, எஸ்.பி., கவுதம் கோயல் பரிசோதிக்க முடிவு செய்தார்.

அதற்கு சீருடையில் இல்லாத, 2 போலீசாரை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில், ஆத்துார் சோதனைச்சாவடி வழியே நேற்று முன்தினம் இரவு அனுப்பினார். அவர்கள் ஆத்துார் ஊரகம், டவுன் பகுதியில் உள்ள வாகன சோதனைச்சாவடியை, போலீசார் கெடுபிடியின்றி கடந்து சென்றனர். இதனால் ஆத்துார் ஊரக ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., லட்சுமி, ஏட்டுகள் வேணுகோபால், மணிகண்டன், ஆத்துார் டவுன் எஸ்.எஸ்.ஐ., அழகேசன், ஏட்டுகள் அருண்குமார், வரதராஜ் ஆகியோரை, மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றி, எஸ்.பி., உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us