/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தம்பதியிடம் கொள்ளை ஊட்டிக்கு சென்ற தனிப்படை
/
தம்பதியிடம் கொள்ளை ஊட்டிக்கு சென்ற தனிப்படை
ADDED : ஆக 02, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், வீராணம் அருகே கோமாளி வட்டத்தை சேர்ந்த விவசாயி பூமாலை. இவரது மனைவி சின்னப்பாப்பா. இவர்களை கட்டிப்போட்டு தாக்கி, வீட்டில் இருந்த, 8 பவுன், 35,000 ரூபாயை கொள்ளையடித்து மர்ம கும்பல் கடந்த, ௨௭ல் காரில் தப்பினர். வீராணம் போலீசார் வழக்குப்பதிந்தனர். 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
கொள்ளை கும்பல் ஏற்காட்டை சேர்ந்தவர்கள் என சந்தேகம் ஏற்பட்டது. மொபைல் எண்களை வைத்து தேடியபோது ஊட்டியில் இருப்பதாக தெரிந்தது. ஒரு தனிப்படை, ஊட்டிக்கு சென்றனர். மற்ற தனிப்படையினர், கோவை, ஏற்காடு, கோமாளி வட்டம் பகுதிகளில் முகாமிட்டு விசாரிக்கின்றனர்.