ADDED : ஜன 10, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி யஷ்வந்த்பூர் - எர்ணாகுளம் ஜே.என்., ரயில், இன்று மாலை, 4:45 மணிக்கு, யஷ்வந்த்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை, 7:00 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும்.
இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே செல்லும். மறுமார்க்க ரயில், நாளை காலை, 9:35க்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு, அதே நாள் இரவு, 10:00 மணிக்கு யஷ்வந்த்பூரை அடையும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

