sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோடை விடுமுறை நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் அறிவிப்பு

/

கோடை விடுமுறை நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடை விடுமுறை நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடை விடுமுறை நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் அறிவிப்பு


ADDED : ஏப் 24, 2025 02:07 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:

கோடை விடுமுறை நெரிசலை குறைக்க, சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மும்பை - கன்னியாகுமரி வார ரயில், மே, 7 முதல் ஜூன், 26 வரை புதன்தோறும் அதிகாலை, 12:30க்கு புறப்பட்டு, மந்திராலயம் சாலை, தர்மாவரம், பங்காருப்பேட்டை, திருப்பத்துார், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியே, வியாழன் மதியம், 1:15க்கு கன்னியாகுமரியை அடையும். வியாழன் அதிகாலை, 4:10க்கு சேலம், 5:18க்கு நாமக்கல் ஸ்டேஷன் வந்து செல்லும்.

மறுமார்க்க ரயில், மே, 8 முதல் ஜூன், 26 வரை, வியாழன் மதியம், 3:30க்கு கிளம்பி, சனி அதிகாலை, 4:15க்கு மும்பையை அடையும். வியாழன் இரவு, 11:42க்கு நாமக்கல், 1:00 மணிக்கு சேலம் வந்து செல்லும்.

ரயில் இயக்க மாற்றம்

கரூர் - திருச்சி வழியில், வைரராக்கியம் - மாயனுார் ஸ்டேஷன்கள் இடையே பாலம் அமைக்கும் பணி நடக்க உள்ளது. இதனால் ஏப்., 24(இன்று), 26, 29 காலை, 6:00 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை - சேலம் ரயில், மாயனுார் வரை மட்டும் இயக்கப்படும். மாயனுார் முதல் சேலம் வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் அன்று மதியம், 2:05க்கு கிளம்ப வேண்டிய சேலம் - மயிலாடுதுறை ரயில், 3:40க்கு கரூரில் இருந்து கிளம்பும். சேலம் முதல் கரூர் வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் ஏப்., 24(இன்று), 26, 29 காலை, 6:30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி ரயில், கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூர் முதல் திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது. இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us