/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு
/
சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : ஏப் 17, 2025 01:25 AM
சேலம்:சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூரு - மங்களூரு சிறப்பு ரயில், இன்று இரவு, 11:55க்கு புறப்பட்டு பங்காருப்பேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு வழியே, மறுநாள் மாலை, 4:00 மணிக்கு, மங்களூருவை அடையும். 18 அதிகாலை, 5:05க்கு சேலம், 6:10க்கு ஈரோடு வந்து செல்லும். மறுமார்க்க ரயில், வரும், 20 மதியம், 2:10க்கு கிளம்பி, அடுத்தநாள் காலை, 7:30 மணிக்கு பெங்களூருவை அடையும். 21 அதிகாலை, 12:50க்கு ஈரோடு, 1:47க்கு சேலம் வந்து செல்லும்.
செகந்திராபாத் செல்லாதுஅதேபோல் செகந்திராபாத் ஸ்டேஷனில் மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இதனால் நாந்தெட் -ஈரோடு வார ரயில், வெள்ளி மதியம், 2:20க்கு புறப்பட்டு சேலம் வழியே அடுத்தநாள் மதியம், 2:00 மணிக்கு ஈரோடு வந்து சேரும். இந்த ரயில் மே, 2 முதல், செகந்திராபாத் செல்லாமல், தயானந்த் நகர், சார்லபள்ளி வழியே இயக்கப்படும். மறுமார்க்க ரயில், ஞாயிறு அதிகாலை, 5:15க்கு கிளம்பி, மறுநாள் காலை, 7:30 மணிக்கு நாந்தெட்டை அடையும். இந்த ரயில், மே, 4 முதல், செகந்திராபாத் செல்லாமல், சார்லபள்ளி, தயானந்த் நகர் வழியே இயக்கப்படும். இத்தகவலை, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.