/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேதாத்திரி மகரிஷி பள்ளியின் விளையாட்டு சங்கமம்-2025
/
வேதாத்திரி மகரிஷி பள்ளியின் விளையாட்டு சங்கமம்-2025
வேதாத்திரி மகரிஷி பள்ளியின் விளையாட்டு சங்கமம்-2025
வேதாத்திரி மகரிஷி பள்ளியின் விளையாட்டு சங்கமம்-2025
ADDED : ஜன 28, 2025 07:16 AM
சேலம்: சேலம் மாவட்டம், -தாரமங்கலத்தில் உள்ள வேதாத்திரி மகரிஷி பள்ளியில் கடந்த ஜன., 24, 25- ஆகிய இரண்டு நாட்கள், 2,300 மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ற விளையாட்டு சங்கமம் சிறப்பாக நடந்தது.
விழாவில் பள்ளி தலைவர் பூபதிராஜன், கலையரசி பூபதிராஜன், துணைத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் தாளாளர் சுபலதா ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அன்பகம், அறிவகம், அருளகம் மற்றும் எழிலகம் ஆகிய நான்கு அணிகளுக்கிடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதில், அன்பகம் அணி அதிக புள்ளிகள் பெற்று கோப்பையை வென்றது. மாணவர்கள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன், சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியின் முதல்வர்கள் ஜெயா எலிசபெத் மேரி மற்றும் லட்சுமி பிரபா ஆகியோர், விழாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

