sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவன் விஷம் குடித்து மயக்கம் பள்ளி ஆசிரியையிடம் விசாரணை

/

மாணவன் விஷம் குடித்து மயக்கம் பள்ளி ஆசிரியையிடம் விசாரணை

மாணவன் விஷம் குடித்து மயக்கம் பள்ளி ஆசிரியையிடம் விசாரணை

மாணவன் விஷம் குடித்து மயக்கம் பள்ளி ஆசிரியையிடம் விசாரணை


ADDED : ஜூன் 07, 2025 02:54 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:மாணவன் விஷம் குடித்த விவகாரத்தில், பள்ளி ஆசிரியையிடம், மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்த பள்ளத்தானுார் வடக்கு பகுதியை சேர்ந்த மாணவன், நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து விட்டு, கூட்டாத்துப்பட்டி பஸ் ஸ்டாண்டில் மயங்கி கிடந்தார்.

அருகில் உள்ளவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், பள்ளியில் உள்ள ஆங்கில ஆசிரியை கண்டித்ததால், மாணவன் விஷம் குடித்ததாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியையிடம், மாவட்ட கல்வி அலுவலர் நரசிம்மன் விசாரணை நடத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us