sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓட்டப்பந்தயத்தில் மெடல்கள் வாங்கிய மாணவி உதவி கேட்டு மனு வழங்கல்

/

ஓட்டப்பந்தயத்தில் மெடல்கள் வாங்கிய மாணவி உதவி கேட்டு மனு வழங்கல்

ஓட்டப்பந்தயத்தில் மெடல்கள் வாங்கிய மாணவி உதவி கேட்டு மனு வழங்கல்

ஓட்டப்பந்தயத்தில் மெடல்கள் வாங்கிய மாணவி உதவி கேட்டு மனு வழங்கல்


ADDED : நவ 04, 2025 01:49 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், ஓட்டப்பந்தயத்தில், 20க்கும் மேற்பட்ட மெடல்களை வாங்கியுள்ள மாணவி நிஷாந்தினி, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற உதவி செய்யக்கோரி, கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

சேலம் மாரமங்கலத்துப்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்த பொன்னுசாமி மகள் நிஷாந்தினி, சூரமங்கலத்தில் உள்ள புனிதமேரி பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று, ஓட்டப்பந்தயங்களில் வெற்றி பெற்ற, 20க்கும் மேற்பட்ட மெடல்களை அணிந்து வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

ஏழை குடும்பத்தை சேர்ந்த நான், மாவட்ட அளவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட 100, 200, 400 மற்றும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு பரிசு

பெற்றுள்ளேன்.

மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க, வெளியூர்களுக்கு சென்று வரும் அளவுக்கு வசதி இல்லை. எனவே நிதி உதவி அல்லது விளையாட்டுத்துறை சார்பில் கலந்து கொள்ள உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us