ADDED : நவ 04, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், நதாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில் முகூர்த்த தினத்தில் ஏராளமான திருமணங்கள் நடப்பது வழக்கம்.
அதன்படி, ஐப்பசி மாத கடைசி வளர்பிறை சுப முகூர்த்த தினமான நேற்று கோவிலில், 21 திருமணங்கள் நடந்தன. நடை அதிகாலை திறந்தது முதல், மணமக்கள் அவர்களின்  உறவினர்களால் கோவில் வளாகம் நிரம்பி களைகட்டியது.
நேற்று, 21 திருமணம் உட்பட கடந்த அக்., 24, 27, 31 என நான்கு முகூர்த்த தினங்களில், 49 திருமணங்கள் நடந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

