sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க பழங்குடி மக்களுக்கு மானியம்

/

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க பழங்குடி மக்களுக்கு மானியம்

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க பழங்குடி மக்களுக்கு மானியம்

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க பழங்குடி மக்களுக்கு மானியம்


ADDED : ஆக 08, 2025 01:45 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, சாமகுட்டப்பட்டி, அடிமலைப்பட்டியில், 40 விவசாயிகளுக்கு, மலைக்கிராமங்களில் சிறுதானியம் சாகுபடி செய்ய, மானியத்தில் விதை தொகுப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத் கூறியதாவது:

மலைக்கிராமங்களில் சிறுதானியம் சாகுபடி செய்யும் பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் சாமை, தினை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு, 1,600 பின்னேற்பு மானியம், 100 சதவீத மானியத்தில், சிறுதானிய விதை தொகுப்பு வழங்கப்படும். அதன்படி தற்போது, சாமகுட்டப்பட்டி, அடிமலைப்பட்டியில், 40 விவசாயிகளுக்கு விதை தொகுப்பு வழங்கப்பட்டது. பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 200 ஏக்கர் இலக்கு நிர்ணயித்து, இதுவரை, 100 ஏக்கருக்கு வழங்கப்பட்டது. மலைவாழ் பழங்குடியின விவசாயிகள், பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us