/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாகூர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
தாகூர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : மே 09, 2024 06:47 AM
சேலம் : தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரோகித் ஸ்ரீராம், பிளஸ் 2 தேர்வில், 589 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
மானஸ்வினி, 584 மதிப்பெண் பெற்று, 2ம் இடம், பாலமுருகா, பூவிழி ஆகியோர், 582 மதிப்பெண்கள் பெற்று, 3ம் இடம், காவியா, 581 மதிப்பெண் பெற்று, 4ம் இடம், ஜோஹியாஸ்ரீ, 580 மதிப்பெண் பெற்று, 5ம் இடம் பெற்றனர். 580க்கு மேல், 6 மாணவர்கள், 575க்கு மேல், 7 பேர், 550க்கு மேல், 31 பேர், 500க்கு மேல், 93 பேர், 450க்கு மேல், 215 பேர், 400க்கு மேல், 347 பேர் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பயாலஜியில் 2 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸில், 10 பேர், அக்கவுண்டன்சியில் ஒருவர், வணிக கணிதம் பாடத்தில் ஒருவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர். 99 மதிப்பெண்களை, தமிழில், 19 பேர், இயற்பியல், அக்கவுண்டன்சியில் தலா, 3 பேர், வேதியியலில், 6 பேர், கணிதத்தில், 8 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸில், 10 பேர், பொருளியல், பாட்டனி, வணிகவியலில் தலா ஒருவர் பெற்றுள்ளனர். சாதனையாளர்களை தாகூர் கல்வி நிறுவன தலைவர் தங்கவேல், செயலர் பரமசிவம், பொருளாளர் காளியண்ணன், நிர்வாகிகள் அருண்குமார், காளியப்பன், ராஜு, சிலம்பரசன், கல்வி குழு ஆலோசகர் பழனிவேல், இயக்குனர்கள் ஆண்டவர் முத்துசாமி, பழனிவேல், முதல்வர் சுப்ரமணியன் உள்பட பலரும் வாழ்த்தினர்.