sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில்வே வளர்ச்சி பணிக்கு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6,626 ‍கோடி ஒதுக்கீடு

/

ரயில்வே வளர்ச்சி பணிக்கு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6,626 ‍கோடி ஒதுக்கீடு

ரயில்வே வளர்ச்சி பணிக்கு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6,626 ‍கோடி ஒதுக்கீடு

ரயில்வே வளர்ச்சி பணிக்கு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6,626 ‍கோடி ஒதுக்கீடு


ADDED : பிப் 04, 2025 08:18 PM

Google News

ADDED : பிப் 04, 2025 08:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:''பட்ஜெட்டில் ரயில்வே வளர்ச்சி பணிக்கு தமிழகத்துக்கு, 6,626 ‍கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா கூறினார்.

ரயில்வே பட்ஜெட் குறித்த, ஆன்லைன் ஆலோசனை கூட்டம், சேலம் ஜங்ஷனில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் நடந்தது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பட்ஜெட் குறித்து அளித்த பேட்டி ஒளிபரப்பப்பட்டது.

பின், சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு ரயில்வே மேம்பாட்டு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 2025-26ம் ஆண்டுக்கு, 6,626 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த, 2009-2014ம் ஆண்டுக்கான சராசரி ஒதுக்கீடான, 879 கோடியை விட, 7.5 மடங்கு அதிகம். தமிழகத்தில், 2,587 கி.மீ., நீளமுள்ள, 22 திட்டங்கள், 33,467 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. 77 ரயில் நிலையங்கள், 2,948 கோடி ரூபாய் செலவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. 1,460 கோடி செலவில் 'கவாச்' பாதுகாப்பு அமைப்புகள் இயக்குவதற்கான, 601 பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே சேலம் கோட்டத்தில் உள்ள போத்தனுாரில், 200 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல் ரயில்வே கோட்டத்தில், 271 கோடி மதிப்பில் அம்ருத் பாரத் திட்டத்தில், 15 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள், 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் மூன்று மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். கோவை, கரூர், ஈரோடு, சேலத்தில் பல்வேறு ரயில்வே பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு கூறினார்.

ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us