/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழக ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
தமிழக ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 25, 2025 01:03 AM
சேலம், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க, சேலம் கிளை சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை வகித்தார்.
அதில், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்குதல்; மருத்துவ படியாக, 1,000 ரூபாய் வழங்குதல்; குடும்ப பாதுகாப்பு நிதியை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தல்; அனைத்து மூத்த குடிமக்களுக்கும், டவுன் பஸ்களில் இலவசமாக பயணிக்க அரசாணை வெளியிடுதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. செயலர் அயூப், மாநில துணைத்
தலைவர் ராகவன் உள்பட பலர்
பங்கேற்றனர்.

