sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'சுற்றுலா பயணியர் வருகையில் தமிழகம் 2ம் இடம்'

/

'சுற்றுலா பயணியர் வருகையில் தமிழகம் 2ம் இடம்'

'சுற்றுலா பயணியர் வருகையில் தமிழகம் 2ம் இடம்'

'சுற்றுலா பயணியர் வருகையில் தமிழகம் 2ம் இடம்'


ADDED : ஜன 26, 2025 03:51 AM

Google News

ADDED : ஜன 26, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ''ஓராண்டில் மட்டும் தமிழகத் துக்கு, 28.40 கோடி சுற்றுலா பய-ணியர் வந்துள்ளனர். இது இந்திய அளவில் இரண்டாம் இடம்,'' என, அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

தேசிய சுற்றுலா தினத்தையொட்டி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், நேற்று மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து சேலம், ஏற்காடு அடிவாரம், வனத்துறை சுங்கச்சாவடி அருகே, சுற்றுலா பயணியருக்கு மரக்-கன்று, மஞ்சப்பைகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 300 சுற்றுலா தலங்களில் சர்வதேச தரத்துக்கு இணையான வசதிகளை ஏற்ப-டுத்த, சுற்றுலா பெருந்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்துக்கு, 28.40 கோடி சுற்றுலா பய-ணியர் வந்துள்ளனர். இது இந்திய அளவில் இரண்டாம் இடம். வெளிநாட்டு சுற்றுலா பயணியர் மட்டும், 9.63 லட்சம் பேர் வந்-துள்ளனர். இது இந்திய அளவில், 6ம் இடம்.குறிப்பாக கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மாமல்லபுரம், திருச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு அதிகம் வருகின்றனர். ஏற்காடு ஏரியில் மிதக்கும் படகு உணவகம் தொடங்க ஆய்வு நடக்கிறது. மேலும் ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமி-ஷனர் ரஞ்ஜீத்சிங், வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us