/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'டேனிஷ்பேட்டை அரசு பண்ணையில் 134 டன் நெல் விதை உற்பத்திக்கு இலக்கு'
/
'டேனிஷ்பேட்டை அரசு பண்ணையில் 134 டன் நெல் விதை உற்பத்திக்கு இலக்கு'
'டேனிஷ்பேட்டை அரசு பண்ணையில் 134 டன் நெல் விதை உற்பத்திக்கு இலக்கு'
'டேனிஷ்பேட்டை அரசு பண்ணையில் 134 டன் நெல் விதை உற்பத்திக்கு இலக்கு'
ADDED : ஜன 03, 2025 03:39 AM
காடையாம்பட்டி: காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையில் அரசு விதைப்பண்ணை மற்றும் தென்னை நாற்று பண்ணை உள்ளது.
அங்கு பண்-ணையின் செயல்பாடு குறித்து, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது:பண்ணையில் பாரம்பரிய ரக நெல் சாகுபடி முறையில், மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, கோ - 55, கோ -52, ஏ.டி.டி., - 45, சீரக-சம்பா, கருப்பு கவுனி, டி.கே.எம்., - 13 உள்ளிட்ட நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தரமான விதை-களை வினியோகிப்பதே அரசு விதைப்பண்ணையின் நோக்கம். கடந்த மூன்றரை ஆண்டில், 331 மெட்ரிக் டன் நெல் விதைகள், பயறு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, உரிய வட்டார வேளாண் அலுவலகம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்-ளன. நடப்பாண்டு, 134 டன் நெல் விதைகள் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி-ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 80,000 தென்னை நாற்-றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வேளாண் பொறியியல் துறை சார்பில், இ - வாடகை திட்டத்தில், டிராக்டர் உழவு பணி ஆய்வு செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம், நேர்முக உதவி-யாளர் நீலாம்பாள், வேளாண் பொறியியல் துறை செயற்பொறி-யாளர் குமரன் உடனிருந்தனர்.