sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவியரிடம் அத்துமீறிய தொழில்நுட்பனர் 'சஸ்பெண்ட்'

/

மாணவியரிடம் அத்துமீறிய தொழில்நுட்பனர் 'சஸ்பெண்ட்'

மாணவியரிடம் அத்துமீறிய தொழில்நுட்பனர் 'சஸ்பெண்ட்'

மாணவியரிடம் அத்துமீறிய தொழில்நுட்பனர் 'சஸ்பெண்ட்'


ADDED : பிப் 13, 2025 02:56 AM

Google News

ADDED : பிப் 13, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு மருத்துவ கல்லுாரி பயிற்சி மாணவியரை சீண்டிய ஆய்வக தொழில்நுட்பனர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சேலம், இரும்பாலை அரசு மருத்துவ கல்லுாரி, உயிர் வேதியியல் துறையில் ஆய்வக தொழில்நுட்பனராக பணியாற்றியவர் வேலு, 55. இவர், ஆய்வக தொழில்நுட்ப பயிற்சி மாணவியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, 80 மாணவியர் கையெழுத்திட்டு ஆதாரத்துடன், டீனுக்கு புகார் அனுப்பினர்.

தொடர்ந்து, கல்லுாரி விசாகா கமிட்டி சேர்மன் சுபா தலைமையில், 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், மாணவியரிடம் தனித்தனியே விசாரித்தனர். அதில், மாணவியர் வாட்ஸாப் எண்ணுக்கு, வேலு தவறான படங்கள், குறுந்தகவல்கள் அனுப்பி தொந்தரவு கொடுத்தது தெரிந்தது. இதை, அவரும் விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பான அறிக்கை, கடந்த, 4ல் சென்னை மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டது. மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி, நேற்று வேலுவை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us