sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆலய தேர் திருவிழா கோலாகலம்

/

ஆலய தேர் திருவிழா கோலாகலம்

ஆலய தேர் திருவிழா கோலாகலம்

ஆலய தேர் திருவிழா கோலாகலம்


ADDED : டிச 09, 2024 07:22 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலய தேர் திருவிழாவுக்கு, கடந்த, 17ல் கொடியேற்றம் நடந்தது. 24ல் தேர்களில் சிலைகளை எடுத்து வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திருவிழா நிறுத்தப்பட்டது. பின் பேச்சு நடத்தி, டிச., 8ல் தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மாலை, 6:00 மணிக்கு சேலம் ஆயர் ராயப்பன் தலைமையில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், சிலை எடுத்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிறிஸ்து அரசர் சிலையை, ஆலய பங்கு தந்தை பிரகாஷ் எடுத்து வைத்தார். மற்ற இரு சிலைகளை, மக்கள் எடுத்து வைத்தனர். பின் மின்னொளி அலங்காரத்தில் வடிவமைத்திருந்த தேரை, முக்கிய வீதிகள் வழியே திரளானோர் இழுத்துச்சென்றனர். ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.

சின்னப்பர் தேவாலயம்ஓமலுார் அருகே, ஆர்.சி.செட்டிப்பட்டி புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலயத்தில், 133வது அமலோற்பவமாதா திருவிழா கடந்த நவ., 30ல் தொடங்கியது. நேற்று, சேலம் மறை மாவட்ட பேராயர் ராயப்பன் தலைமையில், 'வேண்டுதல் தேர்' திருப்பலி நடந்தது.

ஆலயத்தில் இருந்து முதலில் புறப்பட்ட சிறு தேரில், அந்தோனியார் சொரூபம், இரண்டாவது தேரில் செபஸ்தியார் சொரூபம், மூன்றாவது பெரிய தேரில் அமலோற்பவமாதா சொரூபத்துடன், முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக இழுத்துச்சென்றனர். அதற்கு முன் ஏராளமானோர், கையில் மெழுகுவர்த்தி ஏந்திச்சென்றனர். இன்று கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us