sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிறுத்தப்பட்ட சாலை பணி: தற்காலிக சீரமைப்பு

/

நிறுத்தப்பட்ட சாலை பணி: தற்காலிக சீரமைப்பு

நிறுத்தப்பட்ட சாலை பணி: தற்காலிக சீரமைப்பு

நிறுத்தப்பட்ட சாலை பணி: தற்காலிக சீரமைப்பு


ADDED : பிப் 21, 2025 07:37 AM

Google News

ADDED : பிப் 21, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி; இடைப்பாடி, ஆவணிப்பேரூர் கீழ்முகம் ஊராட்சி, வெள்ளாண்டி வலசு காமராஜ் நகர் மக்கள், தீயணைப்பு நிலையம் உள்ள சாலையை, பிரதானமாக பயன்படுத்துகின்றனர். அச்சாலையை சீரமைக்க, முதல்வர் கிராம சாலைகள் திட்டத்தில், 21.45 லட்சம் ரூபாயில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் கடந்த ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டது. 6 மாதங்களுக்கு முன் சாலையை உடைத்து பெரிய ஜல்லிக்கற்களால், ஒரு அடுக்கு சாலை போடப்பட்டது. மற்றொரு அடுக்கு சாலை அமைக்க வேண்டிய நிலையில், 5 மாதங்களாக பணி நிறுத்தப்பட்டது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.

இதுகுறித்து, கடந்த, 16ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, ஊரக வளர்ச்சி அதிகாரிகள் அறிவுறுத்தல்படி, ஒப்பந்ததாரர், ஜல்லிக்கற்கள் தெரியாதபடி மண் கொட்டி, ரோலர் மூலம் தற்காலிக சீரமைப்பு பணியை, கடந்த, 17ல் மேற்கொண்டார். மேலும் ஒன்றிய பொறியாளர் நியமனத்துக்கு பின், சாலை முழுமையாக போடப்படும் என, அதிகாரி கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us