/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜவுளிக்கடை மேலாளர் மயங்கி விழுந்து சாவு
/
ஜவுளிக்கடை மேலாளர் மயங்கி விழுந்து சாவு
ADDED : ஜூலை 22, 2025 01:19 AM
சேலம், சேலம், ஜவுளிக்கடை மேலாளர் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருச்சி, மணமேடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்ஜோதி, 51. இவர் பொன்னம்மாபேட்டையில் உள்ள ஜவுளிக்கடையில், கடந்த 15 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்தார். திருமணமாகாத இவர், ஜவுளிக்கடைக்கு சொந்தமான அறையில் தங்கியிருந்தார்.
நேற்று காலை அவர் ஜவுளிக்கடைக்கு வரவில்லை. ஊழியர்கள் அவர் தங்கியுள்ள அறைக்கு சென்று பார்த்த போது, அருள்ஜோதி மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.