sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 04, 2025 ,ஆவணி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4 ஆண்டுக்கு பின் துாக்கு தேர் திருவிழா

/

4 ஆண்டுக்கு பின் துாக்கு தேர் திருவிழா

4 ஆண்டுக்கு பின் துாக்கு தேர் திருவிழா

4 ஆண்டுக்கு பின் துாக்கு தேர் திருவிழா


ADDED : செப் 03, 2025 02:30 AM

Google News

ADDED : செப் 03, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, தர்ம நகரில் உள்ள, எட்டடி முத்துசாமி, மாரியம்மன், செல்லியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் தேர் திருவிழா நடத்தப்பட்டது.

இந்நிலையில், 4 ஆண்டுக்கு பின், திருவிழா நடத்த சுவாமி உத்தரவு கொடுத்ததால், கடந்த ஆக., 10ல், காப்பு கட்டுதலுடன் தேர் திருவிழா தொடங்கியது.

நேற்று, மாரியம்மன், செல்லியம்மன் தேர் திருவிழா நடந்தது. மூங்கிலால் செய்த, 20 அடி உயரத்தில் உள்ள, இரண்டு துாக்கு தேர்களை, முக்கிய வீதிகள் வழியே ஏராளமான பக்தர்கள், தோளில் சுமந்து ஊர்வலமாக, கோவிலுக்கு சென்றனர். மாரியம்மன், செல்லியம்மன் சுவாமிகள், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

அலகு குத்துதல்

தலைவாசல் அருகே புத்துாரில் உள்ள மாரியம்மன், கருப்பண்ணார் கோவிலில், கடந்த ஆக., 26ல், தேர் திருவிழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கருப்பண்ணார் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று மாரியம்மன் சுவாமிக்கு அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us