sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

12ல் மேட்டூர் வரும் முதல்வர் நகராட்சி சாலைகள் சீரமைப்பு

/

12ல் மேட்டூர் வரும் முதல்வர் நகராட்சி சாலைகள் சீரமைப்பு

12ல் மேட்டூர் வரும் முதல்வர் நகராட்சி சாலைகள் சீரமைப்பு

12ல் மேட்டூர் வரும் முதல்வர் நகராட்சி சாலைகள் சீரமைப்பு


ADDED : ஜூன் 09, 2025 03:48 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று, 113.89 அடியாக இருந்-தது. அணை நீர்மட்டம், 90 அடிக்கு மேல் இருந்தால், டெல்டா குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கலாம். நடப்பாண்டு கூடுதலாக இருப்பதால் வரும், 12ல், முதல்வர் ஸ்டாலின், டெல்டா குறுவை சாகுபடிக்கு, பாசன நீரை திறந்து வைக்க உள்ளார்.

இதற்கு, 11 இரவு கோவையில் இருந்து பவானி, அம்மாபேட்டை, சேலம் மாவட்ட எல்லையில் உள்ள பெரும்பள்ளம் வழியே மேட்டூர் வரும் முதல்வர், நவப்பட்டியில், மேட்டூர் தொகுதி, தி.மு.க., நிர்-வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் பேச உள்ளார்.தொடர்ந்து மேட்டூர் நீர்வளத்துறை ஆய்வு மாளிகையில் தங்கும் முதல்வர், 12 அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ளவும், அப்-போது அறிவுசார்மையம், உழவர் சந்தைக்கு சென்று பார்வையிட திட்டமிட்டிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு, மேட்டூர் அணைக்கு சென்று பாசன நீரை திறந்து வைக்க உள்ளார்.

இதனால் நீர்வளத்துறை சார்பில் ஆய்வு மாளிகை, அணை பூங்கா, நகராட்சி சார்பில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வரு-கின்றன. குண்டும், குழியுமாக இருந்த சாலைகள், 'பேட்ச் ஒர்க்' மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

உழவர் சந்தையில்

விற்பனை தாமதம்

மேட்டூர் உழவர் சந்தையை, வரும், 12ல் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட திட்டமிட்டுள்ளார். இதனால் நேற்று அதிகாலை, காய்கறி கொண்டு வந்த விவசாயிகளை நிறுத்திய அலுவலர்கள், வரும், 12 அன்று, காய்கறி விற்பனை தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதனால் விவசாயிகள், அரை மணி நேரம் தாமதமாக, காலை, 6:00 மணிக்கு விற்பனையை தொடங்கினர். முன்னதாக வந்த வாடிக்கையாளர்கள், காத்திருந்து காய்கறி வாங்கி சென்றனர். விற்பனை முடிந்த பின், அலுவலர்கள் ஆலோசனை வழங்கி இருந்தால், விற்பனையில் தாமதம் ஏற்பட்-டிருக்காது என, விவசாயிகள் தெரிவித்தனர்.

2 இடங்களில் 'ரோடு ேஷா'

மேட்டூரில் இருந்து வரும் வழியில், பஞ்சுகாளிப்பட்டி மற்றும் ஓமலுார், வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே என, இரு இடங்களில், முதல்வர் ஸ்டாலினின், 'ரோடு ஷா' நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவில் அருகே சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், நெரிசல் ஏற்-பட வாய்ப்புள்ளதாக, உளவுத்துறை அறிக்கை சென்றது. இதனால் அப்பகுதிக்கு பதில், ஓமலுார் டவுன் பகுதியில் நடத்த திட்டமிட்-டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us