/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முகாமில் தங்கியுள்ளோரிடம் குறைகளை கேட்ட கலெக்டர்
/
முகாமில் தங்கியுள்ளோரிடம் குறைகளை கேட்ட கலெக்டர்
ADDED : டிச 05, 2024 07:40 AM
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுாரில் கன மழையால், 4 வீடுகள் இடிந்து சேதமாகின. அந்த வீடுகளில் வசித்த, 22 பேரை, வரு-வாய்த்துறையினர் மீட்டு, வீரகனுார் தொடக்கப்பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர்.
அவர்களுக்கு, உணவு, உடை, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு நேற்று, சேலம் கலெக்டர்
பிருந்தாதேவி ஆய்வு செய்தார். அப்போது அங்-குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, வீடு
சேதமடைந்த-வர்களுக்கு, வீடுகள் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார்.எம்.எல்.ஏ.,அதேபோல் வசிஷ்ட நதி கரையோரம் உள்ள, 100க்கும் மேற்-பட்ட குடியிருப்பு வீடுகளை, வெள்ளம் சூழ்ந்தது. அதில்
முல்-லைவாடி, ரங்கன் நகர் பகுதி குடியிருப்புகளை, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன்,
ஆய்வு செய்து குறை-களை கேட்டறிந்து, மனுக்கள் பெற்றார். தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கினார். நகர
செயலர் மோகன், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.