ADDED : ஆக 28, 2024 08:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே பசுவநத்தம்பட்டியை சேர்ந்த விவசாயி கந்தசாமி, 70. இவர் கடந்த, 21ல் வீடு அருகே வரப்பில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, வயலில் மேய்ந்து கொண்டிருந்த பக்கத்து தோட்ட மாடு, கந்தசாமியை முட்டி தள்ளியது.
இதில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.