sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெருமாள் கோவில்களில் பகல் பத்து ஆரம்பம்

/

பெருமாள் கோவில்களில் பகல் பத்து ஆரம்பம்

பெருமாள் கோவில்களில் பகல் பத்து ஆரம்பம்

பெருமாள் கோவில்களில் பகல் பத்து ஆரம்பம்


ADDED : ஜன 01, 2025 06:17 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், வரும் 10 ல், சொர்க்கவாசல் திறக்கப்படுவதையொட்டி, பகல் பத்து உற்சவம் நேற்று மாலை, 6:00 மணிக்கு தொடங்கியது. முன்னதாக அங்குரார்ப்பணம் என்ற முலைப்பாலிகை போடப்பட்டு, உற்சவர் அழகிரிநாதருக்கு திருமஞ்சன வைபவம் நடந்தது. அதன்பின், திருமாமணி மண்டபத்தில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து, நாலாயிர திவ்ய பிரபந்தம் ஓதி, 108 வகையான சீர்வரிசைகளுடன், கோவில் உள்வளாகத்தை வலம் வந்தபின், வேத, இதிகாச புராணங்கள் முழங்க விசேஷ ஆராதனை நடந்தது. அதையடுத்து, நம்மாழ்வாருக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, அனைத்து வைணவ கோவில்களிலும் பகல் பத்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என, சுதர்சன பட்டாச்சாரியார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us