sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு வசமானது துளுவ வேளாளர் சமுதாயக்கூடம்

/

அரசு வசமானது துளுவ வேளாளர் சமுதாயக்கூடம்

அரசு வசமானது துளுவ வேளாளர் சமுதாயக்கூடம்

அரசு வசமானது துளுவ வேளாளர் சமுதாயக்கூடம்


ADDED : அக் 26, 2025 01:16 AM

Google News

ADDED : அக் 26, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை கபிலர் தெருவில் துளுவ வேளாளர் சமுதாய கூடம், 2,283 சதுர அடியில், இரு மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

அதில் நடராஜர் பஜனை மடம் மட்டுமின்றி, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பில் இருந்த பஜனை மடம், மண்டபத்துக்கு, 2023ல் கோபிநாத் என்பவர், அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதை நிர்வாகித்து வந்தவர்கள், பொறுப்புகளை, கோபிநாத்திடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தினர். இதுதொடர்பாக அறநிலையத்துறையினர், கடிதம், எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை.

இந்நிலையில் நேற்று, சேலம் மாவட்ட உதவி கமிஷனர் ராஜா தலைமையில் அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன், சமுதாயக்கூடத்துக்கு சென்றனர். பின் மண்டப கட்டடத்தை, அறநிலையத்துறை வசம் எடுத்து, கோபிநாத் பொறுப்பில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us