sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாரியம்மன் கோவில் தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

/

மாரியம்மன் கோவில் தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மாரியம்மன் கோவில் தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மாரியம்மன் கோவில் தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ADDED : ஏப் 25, 2025 01:19 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாமகிரிப்பேட்டையில், வரலாற்று சிறப்புமிக்க மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வாரம் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா மே, 7ம் தேதி நடக்கவுள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை இரவு பூச்சாட்டும் நிகழ்ச்சி நடந்தது.

அம்மனுக்கு பூசாரிகள் மற்றும் பக்தர்கள் பூக்களை துாவி பண்டிகையை தொடங்கி வைத்தனர். 100 கிலோ எடையுள்ள அரளி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்களை துாவினர்.

நேற்று முன்தினம் காலை, கோவில் நிர்வாகம் சார்பில் கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. செயல் அலுவலர் செந்தில்ராஜா, டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அன்பழகன் மற்றும் பக்தர்கள் கலந்து கெண்டனர். நேற்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.

ஒவ்வொரு நாளும் ஒரு சமுதாயத்தினர் பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து அபிேஷகம் செய்வதுடன், சுவாமியை அலங்கரித்து வீதி உலா எடுத்து செல்வர்.

முக்கிய நாளான மே, 7ம் தேதி காலை தீ மிதி விழா, மாலையில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி மஞ்சள் நீராடல் விழாவுடன் தேர்திருவிழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us