/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆர்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க உறுதி முதியவர் உடலை வாங்கிய உறவினர்கள்
/
ஆர்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க உறுதி முதியவர் உடலை வாங்கிய உறவினர்கள்
ஆர்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க உறுதி முதியவர் உடலை வாங்கிய உறவினர்கள்
ஆர்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க உறுதி முதியவர் உடலை வாங்கிய உறவினர்கள்
ADDED : மே 05, 2024 01:49 AM
ஆத்துார்:சேலம்
மாவட்டம் ஆத்துார் அருகே கீரிப்பட்டி, மேல்தொம்பையை சேர்ந்த விவசாயி
ஜோதிவேல், 60. பக்கத்து நிலத்தை சேர்ந்த, விவசாயி ராஜி, 67. இவர்கள்
இடையே, விவசாய நிலத்தில் உள்ள மரத்தின் நிழல் விழுவது தொடர்பாக தகராறு
ஏற்பட்டு வந்தது. கடந்த ஏப்., 30ல் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில்
காயம் அடைந்த ஜோதிவேல் உயிரிழந்தார்.
மல்லியக்கரை போலீசார்,
ராஜி, அவரது மருமகனான, வெள்ளிமலை ஆர்.ஐ., வெங்கடேஷ், உறவினர்கள்
அருள்மணி, வினோ மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
ராஜி, அருள்மணி,
வினோவை கைது செய்தனர். ஆர்.ஐ.,யை கைது செய்யக்கோரி, ஜோதிவேலின் உடலை
வாங்க மறுத்து, அவரது உறவினர்கள், சேலம் கலெக்டர் அலுவலகம் முன், இரு
நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டனர்.
நேற்று ஜோதிவேலின்
உறவினர்கள், கீரிப்பட்டியில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
மல்லியக்கரை போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது, 'ஆர்.ஐ., மீது
குற்றம் உறுதியானால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி
அளித்தனர். அதையேற்ற உறவினர்கள், உண்ணாவிரதம் நடத்தாததோடு,
ஜோதிவேலின் உடலை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து
அவரது உடலை பெற்றுக்கொண்டதாக, போலீசார் தெரிவித்தனர்.