sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நள்ளிரவில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் காரில் தப்பினர்

/

நள்ளிரவில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் காரில் தப்பினர்

நள்ளிரவில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் காரில் தப்பினர்

நள்ளிரவில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் காரில் தப்பினர்


ADDED : ஜன 31, 2024 01:24 AM

Google News

ADDED : ஜன 31, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் கன்னங்குறிச்சியில் வீடு புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற கும்பலை, போலீசார் துரத்திய நிலையில் காரில் தப்பினர்.

சேலம் கன்னங்குறிச்சி கேசவநகரை சேர்ந்தவர் பியூலா தனபால், 42. கடந்த 25ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு, திருச்சி சென்றார். கடந்த 28ம் தேதி இரவு 10:30 மணிக்கு வீடு திரும்பினார்.

வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்ற போது, அங்கிருந்த இருவர் பியூலாவை தள்ளி விட்டு ஓடினர்.

அவர் கூச்சலிட்டார். வீட்டின் முன் தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்த டாடா இண்டிகா காரில் ஏறி கொள்ளையர்கள் தப்பினர். அப்பகுதி மக்கள், கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில் கொள்ளையர்கள், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வந்து நாமக்கல் நோக்கி பறந்தனர்.

அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் கொள்ளையர்களின் காரை துரத்தினர்.

ஆனால், மல்லுார் உட்பட நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீஸ் இல்லாததால், கொள்ளையர் மின்னல் வேகத்தில் பறந்தனர்.

சேலம் மாநகர போலீசார் தொடர்ந்து துரத்திச் சென்ற நிலையில், புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட களங்காணி அருகே சென்ற போது கொள்ளையர்களின் கார் பெட்ரோல் இன்றி நின்றது.

காரில் இருந்து கொள்ளையர்கள் இறங்கி தப்பி ஓடினர். பின் தொடர்ந்து சென்ற, சேலம் மாநகர போலீசார் காரை மட்டும் கைப்பற்றினர். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us