/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கீழே கிடந்த மோதிரம் ஒப்படைத்த மாணவர்கள்
/
கீழே கிடந்த மோதிரம் ஒப்படைத்த மாணவர்கள்
ADDED : நவ 10, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழே கிடந்த மோதிரம்
ஒப்படைத்த மாணவர்கள்
தலைவாசல், நவ. 10-
தலைவாசல் அருகே காமக்காபாளையம், இலுப்பநத்தத்தை சேர்ந்த, பிளஸ் 2 மாணவர்கள் அஸ்வின்குமார், மகிழன், விஷால், ஹரிஹரன். இவர்கள் தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். நேற்று மாலை, 5:00 மணிக்கு தலைவாசலில் தனியார் பயிற்சி மையத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, சாலையில், அரை பவுன் மோதிரம் கிடந்தது. அதை எடுத்த மாணவர்கள், தலைவாசல் ஸ்டேஷனுக்கு சென்று, போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களை, போலீசார் பாராட்டினர்.