sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வழித்தடம் மீண்டும் ஆக்கிரமிப்பு பாதிக்கப்பட்டவர்கள் திடீர் தர்ணா

/

வழித்தடம் மீண்டும் ஆக்கிரமிப்பு பாதிக்கப்பட்டவர்கள் திடீர் தர்ணா

வழித்தடம் மீண்டும் ஆக்கிரமிப்பு பாதிக்கப்பட்டவர்கள் திடீர் தர்ணா

வழித்தடம் மீண்டும் ஆக்கிரமிப்பு பாதிக்கப்பட்டவர்கள் திடீர் தர்ணா


ADDED : அக் 01, 2024 01:39 AM

Google News

ADDED : அக் 01, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வழித்தடம் மீண்டும் ஆக்கிரமிப்பு

பாதிக்கப்பட்டவர்கள் திடீர் தர்ணா

சேலம், அக். 1-

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த, பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி, 44. இவருடன் ஏழு பேர் மனு கொடுக்க, நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தவர்கள், திடீரென கலெக்டர் கார் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகே, தர்ணாவை கைவிட்டனர்.

அதன்பின் மனு கொடுத்ததும், பூபதி கூறியதாவது: சேலம் மாசிநாயக்கன்பட்டி ஏரிக்கு அருகே, ஏழு பேருக்கு சொந்தமான, 68 சென்ட் நிலம் உள்ளது. அந்நிலத்தின் ஒரு பகுதியை, அதே பகுதியை சேர்ந்த இருவர் ஆக்கிரமித்து முள்வேலி போட்டு அடைத்து விட்டனர். இப்புகாரின் பேரில், வாழப்பாடி தாசில்தார், அயோத்தியாப்பட்டணம் பி.டி.ஓ., தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து, வழிதடத்தை அடைத்து விட்டனர். இதற்கு போலீசார் உடந்தையாக இருப்பதால், இந்த பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us